புரட்சித் தலைவி ‘அம்மா’
முக நூலில் ’பழைய’ நண்பர் சுஜாதா தேசிகன் எழுதிய இடுகை இது. கீழே உள்ள ஜெயா படம் அவர் வரைந்தது. சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” சிறுகதைத் தொகுப்புக்கு, அவர் வரைந்த ஸ்ரீரங்கம் ஊர் சார்ந்த படங்கள் (Pencil sketch) அத்தனை அருமையாக இருக்கும்
புரட்சித் தலைவி ‘அம்மா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெ.ஜெயலலிதா நேற்று காலமானார்.
அவரது ஓவியம் ஒன்றை 1995ல் வரைந்தேன்.
“ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு தைரியமா இருக்கா பாருடா” என்று ஓவியம் வரைய சொன்னார் என் அப்பா.
அதற்குப் பிறகு அவரைக் கவனிக்க தொடங்கியதில் அவருடைய ஒவ்வொரு மூவும் ”இரும்பு மனுஷி”யாக காட்சி அளித்தார். கூட்டணியாக இருக்கட்டும், திட்டங்களாக இருக்கட்டும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என்பார்கள் அது போல பல முடிவுகளை எடுத்தார்.
படித்த அறிவுஜீவிகளைக் காட்டிலும் அடித்தட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்துச் செய்தார். ரவுடிகளால் நடத்தப்படும் பல பத்திரிக்கைகள் அவருக்கு எதிரியாக எழுதியும், அட்டைப்படம் போட்டு கேவலப்படுத்தியது, அது எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை மாறாக மேலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு அதையே பெரிய கொள்கையாக கடைப்பித்துக்கொண்டு இருப்பவர்களிடம் “நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவேன்” என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். ஒரு பெண் என்றும் பாராமல் அவரை harass செய்து ’இரட்டை அர்த்த ஜோக்’ அடித்து எங்கே தட்டினால் வலிக்கும் என்று தெரிந்து கொண்டு அவமானப்படுத்தியவர்களை ‘மைனாரிட்டி அரசு’ என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்து சாய்த்தார். சட்டசபையில் அவருடைய துணிச்சலான பேச்சை இனிமேல் கேட்க முடியாது.
அரசியலை விட்டுத் தள்ளுங்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பார்கள் என்பது பரவாலான நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு ’அமைதிப்பூங்கா’ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தார்.
தமிழ்நாட்டுக்கு வேறு என்ன நல்லது செய்துவிட்டார் என்று கேட்கலாம், நாத்திகர்களிடமிருந்து நம்மை காப்பாற்றினாரே அது போதாதா ?
அவருடைய படத்தை ஓவியமாக வரைந்ததற்கு பெருமைப் படுகிறேன்.
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே !
அவரது ஓவியம் ஒன்றை 1995ல் வரைந்தேன்.
“ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு தைரியமா இருக்கா பாருடா” என்று ஓவியம் வரைய சொன்னார் என் அப்பா.
அதற்குப் பிறகு அவரைக் கவனிக்க தொடங்கியதில் அவருடைய ஒவ்வொரு மூவும் ”இரும்பு மனுஷி”யாக காட்சி அளித்தார். கூட்டணியாக இருக்கட்டும், திட்டங்களாக இருக்கட்டும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என்பார்கள் அது போல பல முடிவுகளை எடுத்தார்.
படித்த அறிவுஜீவிகளைக் காட்டிலும் அடித்தட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்துச் செய்தார். ரவுடிகளால் நடத்தப்படும் பல பத்திரிக்கைகள் அவருக்கு எதிரியாக எழுதியும், அட்டைப்படம் போட்டு கேவலப்படுத்தியது, அது எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை மாறாக மேலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு அதையே பெரிய கொள்கையாக கடைப்பித்துக்கொண்டு இருப்பவர்களிடம் “நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவேன்” என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். ஒரு பெண் என்றும் பாராமல் அவரை harass செய்து ’இரட்டை அர்த்த ஜோக்’ அடித்து எங்கே தட்டினால் வலிக்கும் என்று தெரிந்து கொண்டு அவமானப்படுத்தியவர்களை ‘மைனாரிட்டி அரசு’ என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்து சாய்த்தார். சட்டசபையில் அவருடைய துணிச்சலான பேச்சை இனிமேல் கேட்க முடியாது.
அரசியலை விட்டுத் தள்ளுங்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பார்கள் என்பது பரவாலான நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு ’அமைதிப்பூங்கா’ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தார்.
தமிழ்நாட்டுக்கு வேறு என்ன நல்லது செய்துவிட்டார் என்று கேட்கலாம், நாத்திகர்களிடமிருந்து நம்மை காப்பாற்றினாரே அது போதாதா ?
அவருடைய படத்தை ஓவியமாக வரைந்ததற்கு பெருமைப் படுகிறேன்.
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே !
0 மறுமொழிகள்:
Post a Comment